திருவண்ணாமலை சுகாதார மையத்தில் 8வது முடித்தவர்களுக்கான வேலை 2021!!
திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் காலியாக உள்ள CEMONC Security Guard பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களை நாங்கள் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் இதனை பயன்படுத்தி விண்ணப்பித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, CEMONC Security Guard பணிக்கு 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்வமுள்ள மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகிறது.
- ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 35 வரை இருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த TNPSC Coaching Centre – Join Now
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ. 8,500/- வழங்கப்படவுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- மேற்கூறிய பணிகளுக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. 02.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்கான அவகாசம் ஆனது நாளையோடு முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
முகவரி:- கௌரவ செயலாளர் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் பழைய அரசு மருத்துவமனை , செங்கம் ரோடு திருவண்ணாமலை – 606 603