கடைகள் திறந்திருக்கும் நேரம் அதிகரிப்பு? வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை!
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடைகள் திறக்கப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வியாபாரிகளின் நலன் கருதி கடைகள் திறக்கும் நேரத்தை நீட்டிக்குமாறு திருப்பூர் வடக்கு ஒன்றிய வியாபாரிகள் சங்க தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கடைகள் திறக்கும் நேரம் நீட்டிப்பு :
தமிழகத்தில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நோய் தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதாரில் முகவரி மாற்றம் செய்ய பயன்படும் 45 ஆவணங்களின் பட்டியல் – UIDAI வெளியீடு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்ததை தொடர்ந்து பல்வேறு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடைகள் செயல்படும் நேரம் குறைக்கப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் இயங்கி வரும் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் காலை 6 மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் கடைகள் திறந்திருக்கும் நேரம் நீட்டிக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள 13 ஊராட்சிகளில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் இந்த பகுதிகளில் பெரும்பாலும் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். இவர்கள் வேலை முடித்து வீடு திரும்பும் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், கிராமப்புற சிறிய வியாபாரிகள் நலன் கருதியும் கடைகள் திறக்கப்படும் நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.