ரூ.27804/- சம்பளத்தில் தமிழக அரசு வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
பாதுகாப்பு அதிகாரி, சமூக சேவகர் மற்றும் ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் இருந்து முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் செப் 20 உடன் முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இனியும் கால தாமதிக்காமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழக அரசு வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Protection Officer – 02 பணியிடங்கள், Social Worker – 01 பணியிடம் மற்றும் Counselor – 01 பணியிடம் என மொத்தம் 4 பணியிடங்கள் திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ளது.
- இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
Exams Daily Mobile App Download
- குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில், பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசு நிறுவனங்களில் இருந்து சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் / முதுகலை பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு Protection Officer பதவிக்கு ரூ.27804/-, Social Worker பதவிக்கு ரூ.27804/- மற்றும் Counselor பதவிக்கு ரூ.18536/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் 20.09.2022 அன்று அல்லது அதற்கு முன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Download Notification 2022 Pdf
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்