அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.15,000 ஊதியம்! நவ.25 வரை விண்ணப்பிக்கலாம்!
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த வேலைவாய்ப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
தமிழகத்தில் அவ்வப்போது அரசுத்துறை காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது. அதன் பிறகு விண்னப்பங்கள் வரவேற்கப்பட்டு உரிய போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்த வகையில் கடந்த வாரம் நில அளவையர், கள ஆய்வாளர் போன்ற பணியிடங்களுக்கான TNPSC தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வரும் 19ம் தேதி குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அரசு துறையில் உள்ள சில பணியிடங்களுக்கு தற்காலிகமான முறையிலும் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் தற்போது திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவமனை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆய்வு கூட நுட்புநர் நிலை -2 பணியிடத்திற்கு ஊழியர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மொத்தமுள்ள 31 காலிப்பணியிடங்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் DMLT படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்புபவர்களின் வயது வரம்பு 18 முதல் 59 குள் இருக்க வேண்டும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.12,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!
Exams Daily Mobile App Download
மேலும் விண்ணப்பத்தினை தபால் வாயிலாக முதல்வர், மாவட்ட அரசு மருத்துவமனை கல்லூரி, திருப்பூர் 641-608 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். அல்லது மின்னஞ்சல் வாயிலாக [email protected] என்ற முகவரிக்கு நவ.25ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். விண்பித்தவர்களில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பணியிடத்திற்க்கு ஊதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும். இப்பணியானது முற்றுலும் தற்காலிகமானது பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.