திருப்பதி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை – தேவஸ்தானம் அறிவிப்பு!!
ஆந்திராவில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிற காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு தடை:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2 லட்சத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளும் பல நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளன. சில மாநிலங்களில் இரவு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து வருகிறது. ஒரே நாளில் கொரோனாவால் 7 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே கட்டுப்பாடு நடவடிக்கையாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் கடந்த வாரம் முதல் நிறுத்தப்பட்டது. ரூ.300 கட்டணம் வசூலிக்கும் சிறப்பு தரிசனம் மூலமாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் பணி – அரசுக்கு கோரிக்கை!!
தற்போது கொரோனா தாக்கம் கைமீறி போன காரணத்தினால் திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீகல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில் மற்றும் திருப்பதி கோதண்டராம சுவாமி கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் கோவிலில் நடைபெறும் அனைத்து நித்ய கைங்கரியங்கள் பக்தர்கள் இல்லாமல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.