திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் சிறப்பு தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு தரிசனம் ரத்து செய்துள்ளதாக திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான்:

ஆந்திர மாநிலம் திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் திருக்கோயில் உலக புகழ்பெற்ற கோயிகளில் ஒன்றாகும். நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்றின் காரணமாக கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது கொரோனா தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோயில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதிக அளவிலான மக்கள் டோக்கன்கள் முடிந்தவுடன் ஏமாற்றத்துடன் திரும்புவதால் ஆன்லைன் பதிவு முறையை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி நடக்கவேண்டும்.

அக்.25 வரை பள்ளி, கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு – கனமழையால் வெள்ளம் எதிரொலி!

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட நெகட்டிவ் சான்றிதழ் அல்லது 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் போன்றவை அவசியம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த சான்றிதழ்களை தேவஸ்தானத்தில் சமர்ப்பித்த பிறகு தான் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டு 300 ரூபாய் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. அதன்படி நாளொன்றுக்கு 5000 பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்தது. நேற்று 27,482 பேர் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதில் 11,565 பேர் மொட்டை அடித்துக் கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து 3.73 கோடி ரூபாய் உண்டியலில் வசூலாகியுள்ளது. இவ்வாறாக கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் தான் காணிக்கை சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – மாநில அரசு அறிவிப்பு!

அதனை தொடர்ந்து இந்த மாத இறுதியில் அதாவது அக்.30,31 ஆகிய தேதிகளில் கோ மகா சம்மேளன் என்ற பெயரில் விவசாயிகளுக்காக இரண்டு நாட்கள் சிறப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெற்றோர் ஆகியோருக்கு சிறப்பு தரிசனம் வழங்கப்பட்டு வந்தது. அது கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 20ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இப்போது வரை சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் சிறப்பு தரிசனத்திற்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. அது உண்மை இல்லை. அந்த வதந்தியை நம்பி யாரும் திருமலைக்கு வர வேண்டாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!