திருப்பதி தரிசனத்திற்கு முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – இணையதளம் முடக்கம்!
கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் திருப்பதி திருமலா தேவஸ்தான கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் இணையம் முடங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
திருப்பதி தரிசனம்:
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநில வாரியாக அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது. இருப்பினும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் குறைந்த அளவிலான தளர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு பணியாக திருப்பதி திருமலா தேவஸ்தான கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அக்டோபர் மாதத்தில் 21 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை – முழு பட்டியல் வெளியீடு!
தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனம் சிஏய அனுமதிக்கப்பட்டு வந்தனர். பக்தர்களுக்கு 300 ரூபாய் டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது. தினசரி 5000 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் இன்று காலை 9 மணிக்கு திருமலா கோவிலுக்கான முன்பதிவு தொடங்கியது. இந்நிலையில் அதிகப்படியான பக்தர்கள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்ய முற்பட்டதால் இணையம் முடங்கியது.
ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கு – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இணையதளம் முடங்கிய சில நிமிடங்களிலேயே இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/index.html#/login என்ற இணையதளத்தை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. அக்டோபர் 1 ஆம் தேதி முதல் முன்பதிவு தரிசனம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் 31 ஆம் தேதி வரை முன்பதிவு செய்யப்படுகிறது. காலை 10 மணியிலிருந்து மாலை 7 மணி வரை ஒரு மணிநேர இடைவெளியில் முன்பதிவு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது.