திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் டிக்கெட் வழங்குவதில் மோசடி?
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு வழங்கப்படும் டிக்கெட்களில் எந்த ஒரு மோசடியும் நடக்கவில்லை என திருமலை – திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.
தேவஸ்தானம் அறிவிப்பு:
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததன் காரணத்தால் மாநில அரசு அளித்துள்ள தளர்வுகளின்படி, திருப்பதியில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த வகையில் பக்தர்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், இல்லை என்றால் பொது சுகாதார திட்டத்தின் கீழ் அபராதம் அல்லது வழக்குப்பதிவு செய்யப்படும். கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!
நாள் ஒன்றுக்கு 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமையானை தரிசித்து வருகின்றனர். ரூ.300 தரிசனத்திற்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு அதன் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பல்வேறு மோசடி நடப்பதாக தகவல்கள் வெளியாகியது. இந்த தகவல் குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 7 முதல் பள்ளிகள் மீண்டும் திறப்பு – கல்வித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு!
இந்த அறிவிப்பில் பக்தர்களுக்கு ஆன்லைன் மற்றும் ஆப் லைன் மூலம் வழங்கப்படுகிற டிக்கெட்டுகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் பிரிவு கண்காணித்து வருகின்றன. எனவே ஆன்லைனில் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவதில் எந்த ஒரு மோசடிகளும் நடக்க வாய்ப்பே இல்லை என கூறியுள்ளனர். இந்த வகையில் டிக்கெட்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். இந்த தரிசன டிக்கெட்டுகளை கிளவுட் தொழில்நுட்பம் மூலம் வெளியிடுவதால் பக்தர்கள் இவற்றை வேகமாக பெறுகின்றனர். இதனால் ஆன்லைனில் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்குவதில் மோசடி போன்ற தவறான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்று திருமலை – திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.