திருப்பதியில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிரசாதத்திற்கு தட்டுப்பாடு! தேவஸ்தானத்தின் புதிய உத்தரவு!

0
திருப்பதியில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - பிரசாதத்திற்கு தட்டுப்பாடு! தேவஸ்தானத்தின் புதிய உத்தரவு!
திருப்பதியில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - பிரசாதத்திற்கு தட்டுப்பாடு! தேவஸ்தானத்தின் புதிய உத்தரவு!
திருப்பதியில் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – பிரசாதத்திற்கு தட்டுப்பாடு! தேவஸ்தானத்தின் புதிய உத்தரவு!

இந்தியாவில் தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் திருப்பதியில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. அதனால் கூடுதல் லட்டுக்கு வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றினை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி:

திருப்பதியில் போது கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதால் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் ஆன்லைன் மூலமாக ரூ.300 தரிசன டிக்கெட் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி முதல் அடுத்த மாதத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்குகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் ஆகஸ்ட் மாதத்திற்கான டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. மேலும் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது கோடை காலம் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் & அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!

அதனால் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. சுமார் 29 அறைகளில் காத்திருந்து 16 மணி நேரம் காத்திருந்தனர். இதனையடுத்து பக்தர்கள் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 71,196 பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் 36,936 பக்தர்கள் தலைமுடியை காணிக்கை செலுத்தியுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் பக்தர்களுக்கு தலா ஒரு இலவச லட்டு வழங்கப்படுவது வழக்கம். ரூ.50 செலுத்தி பக்தர்கள் எத்தனை லட்டுகள் வேண்டுமானாலும் வாங்கி செல்லலாம்.

Exams Daily Mobile App Download

தற்போது கூட்டம் அதிகரித்துள்ளதால் லட்டுகளை வழங்க தேவஸ்தானம் கட்டுப்பாடு விதித்துள்ளது. அதனால் ரூ.50 கூடுதலாக செலுத்தி 2 லட்டுகள் மட்டும் பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் தங்களுக்கு தேவையான லட்டடுகளை பெற்று செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டாலும் பக்தர்களுக்கு போதிய அளவில் லட்டுகள் கிடைக்கவில்லை. இந்த சூழலை பயன்படுத்தி இடைத்தரகர்கள் கூடுதல் விலைக்கு லட்டுகளை விற்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!