திருப்பதி செல்ல திட்டமிட்டவர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானத்தின் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி கோவிலில் கொரோனா பரவல் குறைந்த பிறகு தற்போது நேரடி தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பல்வேறு தளர்வுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில் புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது.
பக்தர்கள் கவனத்திற்கு:
ஆந்திர மாநிலத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் வருகைபுரிவார்கள். அதனால் கொரோனா கால கட்டத்தில் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த இலவச தரிசன டிக்கெட் ரத்து செய்யப்பட்டது. அத்துடன் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டுமே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனை முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
அட்சய திருதியையில் தங்கம் வாங்க நல்ல நேரம் – 12 ராசிக்காரர்களும் கவனத்திற்கு!
கொரோனா பரவலின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு விதித்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இதனை தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களுக்கு அமல்படுத்திய பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகளை அளித்து வருகிறது. அதன்படி தற்போது இலவச தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அதனால் தற்போது பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அத்துடன் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது குறித்து விரைவில் ஆலோசனை மேற்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தின் முடிவில் தலைவர் சுப்பாரெட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது, சீரமைக்கப்பட்ட ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதை வருகிற 5ம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இதில் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திவ்ய தரிசனம் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அத்துடன் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி-திருமலை இடையே பேட்டரி பஸ்கள் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.