திருப்பதி எழுமையான் திருக்கோவிலில் கேரளா நிபுணர்கள் ஆய்வு – தேவஸ்தானம் அறிவிப்பு!!
ஆந்திராவில் பெய்த தொடர் கனமழை காரணமாக திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் மலைப்பாதைகளில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனை கேரளா பல்கலைக்கழக நிபுணர் குழு ஆய்வு செய்தனர்.
திருப்பதி:
ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா தொற்று குறைய தொடங்கியதும் முன்பதிவு அடிப்படையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இணையதளம் மூலம் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி சென்று கனமழையை ஏற்படுத்தியது.
பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை – திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
இதனால் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. ஒரு வாரமாக பெய்யும் மழையால் ஆந்திராவில் திருப்பதி திருக்கோயில் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும் திருமலைக்கு செல்லும் பாதைகள் முழுவதும் மழைநீர் தேங்கி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் மலைக்கு செல்லும் பாதைகள் பழுதடைந்தது. திருமலைக்கு செல்லும் வழித்தடங்களை வல்லுநர்கள் ஆய்வு செய்தனர்.
‘ஒமிக்ரான் குறித்து அச்சப்பட வேண்டாம், முகக்கவசங்களை அணிந்திருங்கள்’ – முதல்வர் வலியுறுத்தல்!
அதனை தொடர்ந்து கேரளாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் குழு திருப்பதி மலைப்பாதைகளில் மலைச்சரிவு ஏற்பட்ட பாதைகளை ஆய்வு செய்தனர். எதிர்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட கூடிய பகுதிகள் மற்றும் அது போன்ற பகுதிகளை மறுசீரமைக்க திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு விரிவான அறிக்கையை அளிக்க உள்ளனர்.