திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் – 5 ஆயிரமாக குறைப்பு!

0
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் - 5 ஆயிரமாக குறைப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் - 5 ஆயிரமாக குறைப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறப்பு தரிசன டிக்கெட் – 5 ஆயிரமாக குறைப்பு!

கொரோனா ஊரடங்கு காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் கட்டணத்துடன் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்கு எண்ணிக்கை 15 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு தரிசனம்:

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் நாடு முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் பெருகி வந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் 13 மளிகைப் பொருட்கள் & ரூ.2000 விநியோகம் – முதல்வர் நாளை துவக்கி வைப்பு!

இதை தொடர்ந்து கொரோனா 2 ஆம் அலையின் போது பக்தர்களின் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமியை தரிசனம் செய்வதற்கு 300 ரூபாய் கட்டணத்துடன் தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் சிறப்பு தரிசனம் எண்ணிக்கை 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநிலத்தில் பகல் நேரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாலும், அண்டை மாநிலங்களிலும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதனால் சிறப்பு தரிசனத்துக்கான பக்தர்கள் அனுமதி 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!