திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – 15 மணிநேரம் காத்திருப்பு!
பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் அதிக அளவில் பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
சுவாமி தரிசனம்:
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் கொரோனா பரவல் குறைவதையொட்டி பழையபடி அனைத்து சேவைகளும் துவங்கப்பட்டுள்ளன. தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு குறிப்பாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் சூப்பரான அறிவிப்பு!
நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தற்போதைக்கு விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கூடுதலாக பக்தர்களை அனுமதிக்க திட்டமிட்டுள்ளனர். ரூ.300 ஆன்லைன் தரிசன கட்டத்தின் மூலமாக 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஸ்ரீவாணி அறக்கட்டளை மற்றும் பிற சேவைகள் மூலமாக நாள் ஒன்றிற்கு மட்டுமே 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதி சன்னதிக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து தான் அதிகளவில் பக்தர்கள் வருவதாக கூறப்படுகிறது.
Exams Daily Mobile App Download
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மட்டுமே மொத்தமாக 33 குடோன்கள் இருக்கின்றன. அந்த 33 குடோன்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கிறது. பக்தர்கள் அதிக அளவில் வருவதால் 15 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதியில் நேற்று மட்டுமே 73,358 பேர் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் 41,900 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். ஒரு நாளில் மட்டுமே ரூ.4.11 கோடி உண்டியலில் வசூலாகியுள்ளது.