திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – தேவஸ்தானம் ஏற்பாடு!!
கொரோனா பரவல் காரணமாக மத வழிபாட்டு தலங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலின் படி 300 ரூபாய் டோக்கனுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பதி தரிசனம்:
இந்தியாவை பொருத்தளவு, ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யக்கூடிய பிரசித்தி பெற்ற வழிபாட்டு தலம், திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆகும். தற்போது நாடு முழுவதும் தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அனைத்து கோவில்களும் மூடப்பட்டு பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல திருப்பதியிலும் பக்தர்கள் வருகைக்கு கடும் கட்டுப்பாடுகளை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் புதிய கல்விக்கொள்கை அமல் – மத்திய அமைச்சர் ஆலோசனை!!
அந்த வகையில் திருப்பதியில் கடந்த மார்ச் மாதம் முதலே பக்தர்களின் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவிர கோவிலுக்கு வரும் மக்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருந்தது. மேலும் சுவாமியை தரிசனம் செய்ய வரும் அனைவரும் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனால் திருப்பதி ஏழுமலயானை தரிசிக்க வரும் பக்தர்கள் எந்த வித கூட்ட நெரிசல் இன்றி, விஐபி பக்தர்களை போல சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், பக்தர்கள் வேகமாக சென்று சுவாமியை தரிசனம் செய்யும் படி அறிவுறுத்தப்படுவது வழக்கம். கொரோனா சூழலுக்கு மத்தியிலும் 300 ரூபாய் டோக்கனுடன் சுவாமியை தரிசனம் செய்ய வரும் மக்கள் நிறைவுடன் செல்வதாக தெரிவித்துள்ளனர்.