தடுப்பூசி போடாவிட்டால் ஜூன் மாத ஊதியம் நிறுத்தம் – தேவஸ்தான நிர்வாகம்!
திருப்பதி தேவஸ்தானத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த முறையில் பணிபுரியும் அனைவரும் வரும் ஜூலை 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி:
நாட்டில் தற்போது கொரோனா நோய் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கொரோனா தடுப்பூசி தான் என்று கூறப்பட்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும் தங்கள் பணியாளர்கள் மாற்றுக்கும் அவர்களின் குடும்பத்தினரை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் சில நிறுவனங்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்து வருகிறது.
ஆகஸ்ட் 1 இல் நடைபெற உள்ள நீட் தேர்வு ஒத்திவைப்பு? அரசு ஆலோசனை!
தற்போது அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானம் தனது ஊழியர்களுக்கு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைவருக்கும் தேவஸ்தானம் சார்பில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. ஊரடங்கில் தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் பல மாநிலங்களில் இருந்து மக்கள் திருமலைக்கு வருகின்றனர். இதனால் தேவஸ்தானத்தில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
TN Job “FB Group” Join Now
தேவஸ்தானத்தில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட பல ஊழியர்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. திருமலை மட்டுமல்லாமல் திருப்பதியில் உள்ள மத்திய மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஊழியர்கள் வரும் ஜூலை 7ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.