திருப்பதி தரிசனம் செல்வோருக்கு ஒரு குட் நியூஸ் – பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்!
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகை தருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது பக்தர்களுக்கு நன்மை தரும் வகையில் கொரோனா கால கட்டத்தில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட திட்டத்தை மீண்டும் தொடங்க உள்ளது.
பஸ் டிக்கெட்டுடன் தரிசன டிக்கெட்:
கொரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உலக புகழ்பெற்ற ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டது. கொரோனா நோய் பரவல் காரணமாக பக்தர்கள் வருகையை கட்டுப்படுத்துவதற்கு ரூ.300 கட்டண சிறப்பு தரிசனம் முறை மட்டும் அமலில் இருந்தது. அதையடுத்து தற்போது தேவஸ்தானம் இலவச தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டது. பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
தமிழகத்தில் டிச.15 வரை மழைக்கு வாய்ப்பு, கடலோர மாவட்ட மக்கள் கவனத்திற்கு – வானிலை அறிக்கை!
இதற்கு முன் ஆந்திர மாநிலத்தில் அரசு பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு பஸ் டிக்கெட்டுடன் ரூ.300 செலுத்தி தரிசன டிக்கெட்டையும் வழங்கி வந்தது. கொரோனா காரணமாக இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால் இந்த திட்டத்தை தொடங்க உள்ளது. இத்திட்டத்தின் படி திருப்பதிக்கு டிக்கெட் வாங்கும் போது கூடுதலாக ரூ.300 செலுத்தி விரைவு தரிசன டிக்கெட்டையும் பெற்று கொள்ளலாம். அத்துடன் ஒவ்வொரு நாளும் காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும் விரைவு தரிசனம் நடைபெறும். இதில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு உதவியாக சிறப்பு உதவி மையங்களும் செயல்பட இருக்கின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2022 – முழுக்கரும்பு வழங்கல்! விவசாயிகள் கோரிக்கை!
ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில் திருப்பதிக்கு சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து 650 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. மேலும் ஆந்திர மாநிலத்தில் பேருந்து பயணத்திற்கான முன்பதிவு செய்யும் இணையதளம் வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது. இதுவரை www.apsrtconline.org.in என்ற இணையதள பயன்பாட்டில் இருந்தது பிப்ரவரி முதல் இந்த இணையதளம் செயல்படும். அத்துடன் பக்தர்கள் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையின் முடிவில் நெகட்டிவ் சான்றிதழ் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.