திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தற்போது திறக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
பக்தர்கள் கவனத்திற்கு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதில் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது. அத்துடன் உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் தகுந்த கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா காரணமாக பக்தர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டது.
வேகமெடுக்கும் ஓமிக்ரான், இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு அமல் – உள்துறை அமைச்சகம் கடிதம்!
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை அடுத்து இலவச தரிசன டிக்கெட்டுகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு தினசரி 5 ஆயிரம் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனை வெளியிட்ட 15 நிமிடங்களில் பக்தர்கள் முன்பதிவு செய்கின்றனர். இந்நிலையில் அடுத்த மாதம் மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான ஸ்ரீவாணி அறக்கட்டளை தொடர்பான விஐபி தரிசன டிக்கெட்டுகளை நாளை மாலை 3 மணி அளவில் இணையதளத்தில் வெளியிட உள்ளது.
ரேஷன் கார்டு வைத்துள்ளோர் கவனத்திற்கு – ஆதாருடன் இணைப்பு! முழு விபரங்கள் இதோ!
அத்துடன் இதில் புத்தாண்டு தினத்தில் ஏழுமலையானை தரிசிக்க நினைக்கும் விஐபி பக்தர்களுக்கு 1000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது வைகுண்ட ஏகாதசி தினமான ஜனவரி 13ம் தேதி 1000 தரிசன டிக்கெட்டுகளை வெளியிட உள்ளது. மேலும் ஜனவரி 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை 9 நாட்களுக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலமாக 2000 விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. அடுத்த மாதத்தில் மேலே குறிப்பிட மற்ற நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமைகளில் 200 டிக்கெட்டுகளும் சனி மற்றும் ஞாயிறுகளில் 300 டிக்கெட்டுகளும் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.