திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – மே 17 இல் திருவிழா! முன்னேற்பாடுகள் தீவிரம்!

0
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - மே 17 இல் திருவிழா! முன்னேற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - மே 17 இல் திருவிழா! முன்னேற்பாடுகள் தீவிரம்!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – மே 17 இல் திருவிழா! முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் வரும் 17ம் தேதி கெங்கையம்மன் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கெங்கையம்மன் திருவிழா:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு படிப்படியாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் திருப்பதி தேவஸ்தானத்தின் இணையதளம் வாயிலாக வெளியிடப்பட்டு வரும். இதனை பெற்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று தேவஸ்தானம் தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் நேரடி முறையில் வழங்க முடிவு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

சென்னையில் இன்று அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

நாளொன்றுக்கு 10,000 டிக்கெட்டுகள் வீதம் சீனிவாசம் விருந்தினர் மாளிகை வளாகம், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய இடங்களில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், திருப்பதியில் கெங்கையம்மன் திருவிழா எப்போது நடைபெரும் என்ற எதிர்பார்ப்புக்கு ஆந்திர மாநில எம்.எல்.ஏ கருணாகரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இத்திருவிழா மே 17ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

ஆண்டுதோறும் இந்த கெங்கையம்மன் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடம் கொரோனா பெருந்தொற்று காரணமாக இத்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளை காப்பு கட்டும் விழா தொடங்கவுள்ளது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பூஜைகள் நடைபெறும். மேலும் கங்கை அம்மனுக்கு தேவஸ்தானம் சார்பிலும் அரசு சார்பிலும் பட்டு வஸ்திரங்களும் சமர்ப்பிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!