திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பாதிப்புகள் குறைந்த நிலையில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக செல்ல இன்று முதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அதிகமாக இருந்ததால் இந்தியாவில் உள்ள எந்த ஒரு வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூசாரிகளை வைத்து மட்டும் வழிபாடுகளை செய்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா ஓரளவு குறைந்த நிலையில் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருட்கள் தரத்தை கண்காணிக்க குழு!
குறிப்பாக மதுரையில் திருவிழா, புதுக்கோட்டை தேர் திருவிழா மிக விமர்ச்சியாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் வழக்கம்போல திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலில் மக்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கான வசதிகளை செய்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும், திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நம் முன்னோர்கள் நடை பயணமாக செல்லும் வகையில் 2 பாதைகளை உருவாக்கினர். வாகனங்கள் செல்வதற்கு வசதியாக கடந்த நூற்றாண்டில் மேலும் இரு மலைப்பாதைகள் உருவாக்கப்பட்டன. தற்போது தினமும் கார், ஜீப், பஸ் போன்ற வாகனங்கள் மூலமாகவும், நடை பயணமாகவும் சுமார் 1 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகின்றனர். அதன்படி,பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் வசதிக்கு ஏற்ப ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை இன்று முதல் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.