திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

0
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு - தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முன்னோர் காலத்தில் இருந்த காலத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியவர் வெங்கமாம்பா. அவர், திருமலை திருப்பதியில் முக்தி அடைந்தார். அதனால் அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு பிருந்தாவனத்தை கட்ட உள்ளது.

திருமலை அன்னதானம்:

தானத்தில் சிறந்தது அன்னதானம் தானே. அந்த அன்னதானத்தின் மகிமை உணர்த்தும் ஒரு புராணக்கதை உண்டு. அந்த புராணக்கதையை பின்பற்றியவர் தான் வெங்கமாம்பா. அவர் சிறப்பு வாய்ந்த அன்னதானத்தை திருமலையில் முதன் முதலில் தொடங்கி நடத்தியவர். சுமார் 230 ஆண்டுகளுக்கு முன், அதாவது எந்தவித நவீன வசதிகள் இல்லாத காலத்தில் இருந்து திருமலைக்கு நடந்து தான் வந்து சாமி தரிசனம் செய்தாக வேண்டும். அப்படி வரும் பக்தர்களுக்கு உணவளிக்கவும் ஏற்பாடுகளைச் செய்தவர் அவர்.

TN MRB 4,308 காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

மலையேறி வரும் பக்தர்களின் பசிப்பிணியைப் போக்குவதைவிட சிறந்த பணி வேறு என்ன இருந்து விடப்போகிறது என நினைத்து வாழ்ந்தார். இந்த அன்னதான சேவையை தன் உயிருள்ள வரையிலும் சீரும் சிறப்புமாக செய்து முடித்தவர் . இதனால் பக்தர்கள் அவரை, `மாத்ருஶ்ரீ வெங்கமாம்பாள்’ என்று அழைப்பார்கள். அவர் செய்த பணி இன்று வரை தொடர்கிறது. அவர் திருமலையில் முக்தி அடைந்தார். அதனால் வெங்கமாம்பாவுக்காக பிருந்தாவனத்தில் 1.5 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தியான மண்டபம் கட்டப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் புதிதாக கட்டப்படும் தியான மண்டபத்தில் 350 பக்தர்கள் அமர்ந்து தியானம் செய்யலாம் என்றும் விழாவில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி ஏ.வி.தர்மா ரெட்டி, இணை அதிகாரிகள் சதா பார்கவி, வீர பிரம்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனத்தில் தியான மண்டபம் கட்ட அயோத்தி ராமி ரெட்டி எம்.பி. ரூ.5 கோடி காணிக்கையாக வழங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரூ.65.725 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 30,346 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.54 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது என தெரிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!