தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் ரூ.50,000/- ஊதியத்தில் வேலை
திருநெல்வேலி மாவட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் காலியாகவுள்ள மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் கல்வி தகுதி, வயது வரம்பு, கல்வி தகுதி என அனைத்து விவரங்களையும் அறிந்து பின் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை |
பணியின் பெயர் | மீன்வள உதவியாளர் |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.09.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மீனவர் நலத்துறை காலிப்பணியிடங்கள்:
மீன்வள உதவியாளர் பதவிக்கு 8 பணியிடங்கள் காலியாக உள்ளன.
TN Job “FB Group” Join Now
உதவியாளர் கல்வி தகுதி:
மீன்வள உதவியாளர் பதவிகளுக்கு தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருத்தல் வேண்டும். மேலும் நீச்சல், மீன்பிடிப்பு, வலை பின்னுதல், அறுந்த வலைகளை பழுதுபார்க்க தெரிந்திருக்க வேண்டும். மீன்வளத்துறையினரால் நடத்தப்படும் ஏதேனும் ஒரு மீனவர் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
வயது வரம்பு:
பொதுப் பிரிவினர் 18 முதல் 30 வயதுடையவராக இருத்தல் வேண்டும். பெண்கள், ஆதரவற்ற விதவைகளுக்கு முன்னுரிமையில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 18 முதல் 32 வயதுடையவராகவும், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பினர் (முஸ்லிம்கள் தவிர) 18 முதல் 32 வயதுடையவராகவும் இருத்தல் வேண்டும். ஆதிதிராவிடர் பிரிவினர் 18 முதல் 35 வயதுடையவராக இருத்தல் வேண்டும்.
தேர்வு செயல் முறை:
8 மீன்வள உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்முகத்தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும். இது தொடர் பான மேலும் விவரங்களுக்கு 04634-290807 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், மணிமுத்தாறு என்ற முகவரியில் விண்ணப்பங்களை நேரில் பெற்று உரிய நகல் ஆவணங்களுடன் வரும் 30- ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.