திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றுக்கு ரூ.500/- ஊதியம்

0
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் வேலைவாய்ப்பு 2021 – நாள் ஒன்றுக்கு ரூ.500/- ஊதியம்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் தன்னார்வ தொண்டர்களாக சேவை புரிய தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 08.03.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம்
பணியின் பெயர் தன்னார்வ தொண்டர்கள்
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்கும் தேதி 08.03.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
நீதிமன்ற காலிப்பணியிடங்கள்:

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 16 நபர்களும், தென்காசி வட்டச் சட்டப்பணிகள் குழுவில் 06 நபர்களும், அம்பாசமுத்திரம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 04 நபர்களும்,சங்கரன்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 04 நபர்களும்,வள்ளியூர் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 04 நபர்களும், நான்குநேரி வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் 04 நபர்களும், செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும், சேரன்மகாதேவி வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும், சிவகிரி வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும் மற்றும் ஆலங்குளம் வட்ட சட்டப்பணிகள் குழுவில் 03 நபர்களும் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு:

18 வயதுக்குமேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி :

ஆசிரியர்கள் (ஓய்வு பெற்றவர்கள் உட்பட), ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், மூத்த குடிமக்கள்,மருத்துவர்கள் பயிலும் மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் போன்றோர் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

மதிப்பூதியம்:

வேலை பணிபுரியும் முழு நாள் ஒன்றுக்கு ரூபாய் ரூ.500/- மதிப்பூதியமாக வழங்கப்படும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் தேதி மற்றும் இடம் மார்ச் 10ம் தேதிக்கு முன் விண்ணப்பதாரருக்குஅழைப்பு மூலமாகவோ அல்லது SMS மூலமாகவோ தெரிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ விருப்பமுள்ளவர்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி பதிவு தபாலில் கீழே கண்ட முகவரிக்கு 08.03.2021 அன்று அல்லது அதற்கு முன்பாக கிடைக்கப் பெறுமாறு அனுப்பக் கோரப்படுகிறது.

முகவரி:

திருநெல்வேலி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு
ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627002

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!