தமிழக மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு – ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- ஊதியம்..!
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றமானது (Tirunelveli District Court) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Lok Adalat Members பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Tirunelveli District Court |
பணியின் பெயர் | Lok Adalat Members |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
District Court காலிப்பணியிடங்கள்:
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, Lok Adalat Members பணிக்கு என்று இரண்டு காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
District Court தகுதி விவரங்கள்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழுள்ள மக்கள் சேவை பயன்பாட்டு துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரியாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
- வான், சாலை, நீர் வழிப் போக்குவரத்து துறை.
- தபால், தந்தி மற்றும் தொலைபேசி தொடர்புத்துறை.
- குடிநீர் மற்றும் மின்சார வாரியத் துறை.
- பொது துப்புரவு மற்றும் சுகாதாரத்துறை.
- மருத்துவத்துறை.
- காப்பீட்டுக்கழகம்.
- கல்வித்துறை.
- வீட்டு வசதி வாரியம் மற்றும் ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TN Job “FB Group” Join Now
District Court வயது விவரம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கட்டாயம் 62 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
District Court ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்வாகும் பணியாளர்கள் ஒரு அமர்வுக்கு ரூ.2,000/- ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.30,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது || முழு விவரங்களுடன்…!
District Court தேர்வு செயல்முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
District Court விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து சரியாக பூர்த்தி செய்து 30.06.2022 அன்று அல்லது அதற்கு முன்பாக வந்து சேரும்படி, நேரிலோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.