தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்க்கு ரூ.50000/- ஊதியத்தில் தமிழக அரசு வேலை !
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 33 (ஆண்-25, பெண்-8) சமையலர் பணியிடங்கள் மற்றும் 4 (ஆண்-2, பெண்-2) பகுதி நேர துப்புரவாளர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தபால் மூலம் 12.01.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை |
பணியின் பெயர் | சமையலர் & துப்புரவாளர் |
பணியிடங்கள் | 37 |
கடைசி தேதி | 12.01.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஆதிதிராவிடர் நலத்துறை காலிப்பணியிடங்கள்:
- சமையலர் பதவிக்கு 33 பணியிடங்கள் காலியாக உள்ளன. (ஆண்-25 பெண்-8)
- பகுதி நேர துப்புரவாளர் பதவிக்கு 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. (ஆண்-2, பெண்-2)
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
- சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.
சமையலர் வயது வரம்பு:
- 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
- திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும்.
ஊதியம்:
- சமையலர் – ரூ.15700-50000/-
- பகுதி நேர துப்புரவாளர் – ரூ.3000/-
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான நபர்கள் திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 12.01.2021 -க்குள் விண்ணப்பித்திட மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.