TNPSC தேர்வு பாடத்திட்டத்தில் திருக்குறள் முழுவதும் நீக்கம் – சமூக ஆர்வலர்கள் கடும் அதிர்ச்சி!
தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் நேற்று ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், அதில் இருந்து திருக்குறள் பிரிவு நீக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
புதிய பாடத்திட்டம்:
தமிழக அரசு துறைகளில் பணியாளர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ஒவ்வொரு நிலை பதவிகளுக்கும் என்று அரசு தனித்தனியாக குரூப் வாரியாக தேர்வுகளை நடத்துகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தமிழ் மொழிக்கும், மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தமிழக அரசு TNPSC தேர்வுகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்தது. அதன்படி, தேர்வுகளில் முதல் பகுதியான மொழி பாடப்பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு விருப்பங்கள் நீக்கப்பட்டு, தமிழ் மொழி மட்டுமே மொழி பகுதியில் இருக்கும். அதில், தேர்வர்கள் 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவர்களின் விடைத்தாள் அடுத்த பகுதிக்கு தகுதி பெறும் என்று அரசு அறிவித்திருந்தது.
டெபிட், கிரெடிட் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு!
அரசின் இந்த அறிவிப்பினால் TNPSC தேர்வுக்கான பாடத்திட்டம் புதிதாக வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1, குரூப் 4, குரூப் 2 மற்றும் 2A போன்ற தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டத்தை அதிகாரபூர்வ இணையத்தில் வெளியிட்டது. இது தொடர்பான கருத்துக்கள் காலை முதல் வெளியிடப்பட்டு வருகிறது. அதில், முக்கியமாக குரூப் 2 மற்றும் 2A போன்ற அதிகாரி நிலை பதவிகள் தேர்வின் பாடப்பகுதியில் இருந்து திருக்குறள் பகுதி நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிச.25 முதல் இரவு ஊரடங்கு, தீவிர கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!
அதில், தினசரி வாழ்வில் திருக்குறளின் பயன்பாடு, மனித இனத்தில் திருக்குறள் ஏற்படுத்திய தாக்கம், சமூக பொருளாதார அரசியலில் திருக்குறளின் பங்கு, திருக்குறளின் தத்துவம் போன்ற ஆறு முக்கிய பகுதிகள் முன்னதாக இருந்த பாடத்திட்டத்தில் மெயின் தேர்வுகளில் இருந்தது. இறுதியாக 2019ம் ஆண்டு TNPSC தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தான் தற்போது பாடத்திட்டம் வெளியிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதில் இருந்த திருக்குறள் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருக்குறள் பகுதியான அரசு பணி தேர்வுகளில் நீக்கப்பட்டுள்ளது குறித்து தமிழ் சமூக ஆர்வலர்கள் மற்றும் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.