தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு குறித்த முக்கிய அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் வெளியீடு!
தமிழகத்தில் அரசு பணிகளில் பணி புரிய வேண்டும் என்று லட்சக்கணக்கானோர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். இந்த பதிவை 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும். இதனை புதுப்பிக்க தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பை அரசு வழங்கியுள்ளது.
வேலைவாய்ப்பு பதிவு
தமிழகத்தில் அரசு அலுவலகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப TNPSC தேர்வாணையம் போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையாக வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிப்பவர்களுக்கு கல்வித் தகுதிக்கு தகுந்தவாறு அரசு பணி வழங்கப்படுகிறது. அதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தங்களது பள்ளிகள் வேலை வாய்ப்பிற்காக பதிவு செய்து கொடுக்கின்றனர். இதனை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். அவ்வாறு முறையாக புதுப்பிக்காதவர்களுக்கு அரசு பணி கிடைப்பதில்லை.
பிப்ரவரி 28 முதல் பள்ளிகள் திறப்பில் புதிய மாற்றங்கள் – ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து!
தமிழகத்தில் இதுபோன்ற பல்லாயிரக்கணக்கானோர் புதுப்பிக்காமல் இருந்தனர். அதனால் தற்போது இந்த பதிவை புதுப்பிக்காதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சிறப்பு கால அவகாசம் ஒன்றை வழங்கியுள்ளது. அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் கூறியதாவது, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைவாய்ப்பு பதிவை பல்வேறு காரணங்களால் புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவரா நீங்கள்? புதிய மாற்றங்கள் அமல்! தவறாமல் படிங்க!
அதன்படி இந்த வேலைவாய்ப்பு பதிவை 2014, 2015, 2016, 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்க தவறியவர்கள் பதிவு மூப்பினை பெறும் வகையில் மார்ச் 1ம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இதனை புதுப்பிக்க தவறியவர்கள் tnvelaivaippu.gov.in என்ற வேலைவாய்ப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் இணையதளத்தில் புதுப்பிக்க முடியாதவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று வேலைவாய்ப்பு பதிவு புதுப்பிக்கலாம். தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் நேரில் வருபவர்கள் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.
Good and useful