மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிக்க டிப்ஸ் – தவறாமல் படிங்க!
இந்த கால கட்டத்தில் மாணவர்கள் புதிய விஷயங்களை கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் மாணவர்கள் அதை மிக எளிதாக கற்றுக்கொள்ள சில உதவி குறிப்புகளை இப்பதிவில் காணலாம்.
கற்றல் திறன்:
தற்போதைய கால கட்டத்தில் சிறு வயது குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை தினமும் பல வகையான புதிய விஷயங்களை கற்று வருகின்றனர். இவர்களின் மூளை தொடர்ந்து செயல்படுவதால் சில நேரங்களில் சோர்வடைந்து விடுகிறது. இதனால் இவர்கள் கற்றல் திறன் அவ்வப்போது குறைந்து விடுகிறது. தற்போது அவர்கள் மூளை சோர்வடையாமல் மாணவர்கள் புதிய விஷயங்களை எவ்வாறு மிக எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் என்பதற்கான ஓர் முக்கிய குறிப்பை காணலாம்.
WhatsApp பயனர்களுக்கு செம அறிவிப்பு – Multi-Device Support ஆரம்ப பதிப்பு!
அதற்கு ஒரே வழி ஓய்வு. ஆம், மாணவர்கள் தொடர்ந்து படிப்பதால் அவர்கள் மூளை சோர்வடைந்து விடும். எனவே மாணவர்கள் 45 நிமிடம் படித்தால் அடுத்ததாக சுமார் 5 முதல் 10 நிமிடம் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும். இவ்வாறு ஓய்வு எடுக்கையில் மாணவர்களின் மூளை சற்று புத்துணர்ச்சி அடைகிறது. மேலும் இவ்வாறு ஓய்வு எடுக்கையில் மாணவர்கள் புதிய விஷயங்களை மிக எளிதாக கற்றுக்கொள்ள இயலும். இது குறித்து அமெரிக்க ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
TN Job “FB Group” Join Now
அந்த அறிக்கையில் தெரிவித்தாவது, ஓய்வின் போது விழித்திருக்கும் மாணவர்களின் மூளை புதிய திறமையை கற்றுக்கொள்ள தேவையான நினைவுகளை ஒன்றிணைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்கத்தின் கட்டுப்பாட்டுக்கு காரணமான மூளை, சென்சார் மோட்டார் பகுதிகளில் மட்டுமல்லாமல் மற்ற மூளை பகுதிகளான ஹிப்போகேம்பஸ் மற்றும் எண்டார்ஹினல் கேர்டேக்ஸ் ஆகியவற்றிலும் அவர்கள் செயல்பாட்டை கண்டனர். புதிய திறன்களை விரைவாக கற்றுக்கொள்ள இந்த முறையை பயன்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.