தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – நேர மாற்றம் செய்ய முடிவு!
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் வேலை நேரத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்யப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு இந்த நேர மாற்றம் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் மாற்றம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்கத் தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இதனையடுத்து 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டது. அதன் படி 10ம் வகுப்பிற்கு மே 6ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் மே 28 வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி செய்முறை தேர்வுகள் முடிந்து பொதுத்தேர்வும் தொடங்கியது. மே மாதம் 30 ஆம் தேதி வரை 10ம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் தேர்வுக்கு பின்னர் பள்ளிகளுக்கான கோடைகால விடுமுறை குறித்தும் அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை மாற்றி அமைக்க முடிவு செய்யப்ட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது. விடுமுறைக்கு பின் ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் புதிய நேரம் அமலுக்கு வர உள்ளது.