தமிழகத்தில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு – மீறினால் புகார் அளிக்கலாம்! கமிஷனர் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து பட்டாசு வெடிக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
பட்டாசு நேர கட்டுப்பாடு:
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். தீபாவளி அன்று பட்டாசு வாங்காத நபர்கள் யாரும் இருக்க முடியாது. வண்ண வண்ண பட்டாசுகளை மக்கள் வாங்கி வெடிக்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பட்டாசுகளை குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே வெடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி காலை 6 மணி முதல் 7 மணி வரை வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மொத்தமாக இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி மற்ற நேரங்களில் பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பண்டிகைக்கு இன்னும் 1 நாளே உள்ள நிலையில் தலைநகர் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மாநகர காவல் ஆணையர் ஆய்வு பணியை மேற்கொண்டார்.
அரசின் தற்காலிக ஊழியர்களுக்கும் போனஸ் கிடைக்குமா? – மத்திய அரசின் விளக்கம்!
Exams Daily Mobile App Download
அப்போது பேசிய அவர், கோயம்பேடு பகுதியில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பட்டாசு கடைகளின் உரிமங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதில் உரிமம் இல்லாமல் யாரேனும் கடை நடத்துவது தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அனுமதி அளித்துள்ள நேரத்தை தாண்டி வெடித்தால் 112 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.