விவசாயக் கடன்களை செலுத்த அவகாசம் – மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!!
தேசிய வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் விவசாயத்திற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2 வருட அவகாசம் வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
அவகாசம் நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முதலமுறையாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பலர் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். இதனால் பொதுமக்களின் பொருளாதாரநிலை மிகவும் நலிவடைந்து விட்டது. கடந்த ஆண்டின் பாதிப்பில் இருந்தே இன்னும் மீளாத நிலையில், தற்போது 2021 மார்ச் மாதம் முதல் மீண்டும் கொரோனா தொற்றின் 2ம் அலை எழுந்துள்ளதால் மே மாதம் முதல் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
‘நெடுஞ்சாலைகளில் 70 கிமீ, குறுகிய வழிகளில் 30 கிமீ’ – வாகனங்களுக்கு அதிகபட்ச வேகம் நிர்ணயம்!
இந்நிலையில், தேசிய வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்களில் இருந்து வழங்கப்பட்ட விவசாய கடன்களை திருப்பி செலுத்த இரண்டு வருட கால அவகாசம் வழங்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் திருச்சியை சேர்ந்த அய்யாக்கண்ணு என்பவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாய கடன் தள்ளுபடி மற்றும் விவசாய கடன் தளர்வு ஆகியவை மத்திய அரசின் கொள்கை ரீதியான முடிவாகும்.
TN Job “FB Group” Join Now
அதில், நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்தனர். தேசிய வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களிடமிருந்து விவசாயிகள் விவசாயத்திற்காக வாங்கிய கடன்களை செலுத்த கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 8ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.