தமிழகத்தில் தொடக்கக்கல்வி ஆசிரியர் பயிற்சிக்கான கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி வருடந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சிக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க கடந்த ஜூலை 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த பயிற்சியில் பெரும்பாலான மாணவ, மாணவியர்களால் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள இயலவில்லை. அதனால் மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தில் வாக்காளர் & ஆதார் அட்டை இணைப்பு – தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு!
அதன்படி, இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஜூலை 13ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட போதிலும் கிராமப்புறங்களில் இருக்கும் மாணவ, மாணவியர்களால் விண்ணப்பதிவு மேற்கொள்ள முடியவில்லை. அத்துடன் கிராமப்புறங்களில் இன்டர்நெட் தொடர்ச்சியாக கிடைக்காத காரணத்தால் விண்ணப்பிக்க முடியவில்லை என்று வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால் இவர்கள் மேலும் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக, தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் தொடக்கக் கல்வி ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதனால் ஏழை எளிய கிராமப்புற மாணவ, மாணவியர் தொடக்க கல்வி ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பாக ஒரு வார காலம் அவகாசம் அளிக்கப்பட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.