ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு – மின்சாரவாரியம் முடிவு!
தமிழக அரசு ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோருக்கு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஆதார் எண்ணை இணைத்த பின்னரே மின் கட்டணம் வசூலிக்கப்படும் என மின்சாரவாரியம் முடிவு செய்துள்ளது.
மின்கட்டணம் வசூல்:
தமிழகத்தில் இலவச மின் கட்டணம் குறித்து முறைகேடுகள் நடைபெறுவதால் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என மின்சார வாரியம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் ஆதாருடன் மின் இணைப்பு செய்தால் தான் இலவச 100 யூனிட் மின்சாரம் மற்றும் மானிய விலை மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க நுகர்வோருக்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைத்த பின் மின்சார கட்டணம் வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் நவம்பர் 24 ஆம் தேதி முதல் நவம்பர் 30 ஆம் தேதி வரை மின்சார கட்டணம் செலுத்துவோருக்கு 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த அறிவிப்பின் படி வீட்டுப் பயனாளர்கள், விவசாய இணைப்புகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நுகர்வோர்கள் என அனைவரும் ஆதார் எண்ணை மின்சார எண்ணுடன் இணைக்க வேண்டும்.
TNPSC தேர்வர்களுக்கு அலர்ட்.. அதிகரிக்கும் வதந்திகள் – அதிகாரிகள் எச்சரிக்கை!
Exams Daily Mobile App Download
ஆதார் அட்டை இல்லாத நுகர்வோர்கள் புதிதாக ஆதாருக்கு விண்ணப்பித்த நகலுடன் பாஸ்புக், வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்ட், பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்து இலவசம் மற்றும் மானிய விலை மின்சாரத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்கும் பணியை செய்ய தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம் நேரடியாக ஈடுபடவில்லை, இருந்தாலும் இந்த இணைப்பு தமிழக அரசு மூலம் நடைபெறுவதால் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் வெளியே வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.