தமிழக பள்ளிகளில் நேர மாற்றம் அமல் – அரசு எடுக்கப்போகும் முடிவு என்ன?
தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இனிமேல் காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். மேலும் காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு 30 நிமிடங்களாவது ஆகும் என்பதால் பள்ளிகளில் வேலை நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் தெரிவித்துள்ளார்.
நேர மாற்றம்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் தற்போது 10முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கால அட்டவணையில் அறிவித்தபடி பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள் காலையில் உணவு அருந்தாமல் பள்ளிகளுக்கு வருகின்றனர். தற்போது பள்ளிகளில் மதிய சத்துணவு வழங்கப்பட்டாலும் அவர்கள் காலையில் பசியுடன் இருப்பது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது.
Exams Daily Mobile App Download
அதனால் இதனை தடுக்கும் விதமாக தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் இது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக முதல்வர் கூறியதாவது, அனைத்து மாணவர்களுக்கும் பள்ளி நாட்களில் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தை முதற்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு செயல்படுத்த உள்ளதாகவும் அறிவித்தார். அதன்பின் இத்திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் காலை சிற்றுண்டியை முடிப்பதற்கு ஏதுவாக பள்ளி வேலை நேரத்தை மாற்ற உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. அத்துடன் வேலை நேரத்தை பாதிக்காத வண்ணம் பள்ளி நேர மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. மேலும் பள்ளிகளில் நேரம் மாற்றம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, மாணவர்கள் காலை சிற்றுண்டியை உண்பதற்காக பள்ளி வேலை நேரத்தை மாற்றுவது குறித்து இன்னும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. அத்துடன் பள்ளிகளில் நேரம் மாற்றியமைப்பது பற்றி முதல்வருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
மே 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களுக்கு வங்கி விடுமுறை – RBI முக்கிய அறிவிப்பு!
இதையடுத்து தற்போது ஏராளமான மாணவர்கள் பள்ளிகளில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக புகார்கள் வந்துள்ளது. அதனால் இதனை தடுக்கும் வகையில் ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அந்த மாணவர்களின் TC மற்றும் Conduct Certificate-யில் எதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இந்த நடவடிக்கை எடுத்த எடுப்பிலேயே நடைபெறாது என்றும் நிலைமை கைமீறி சென்றால் தான் இது போன்று குறிப்பிட்டு TC வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.