ஜன.17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – கடும் பனி மூட்டம் எதிரொலி!

0
ஜன.17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு - கடும் பனி மூட்டம் எதிரொலி!
ஜன.17 வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு - கடும் பனி மூட்டம் எதிரொலி!

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பின்படி மீரட் மற்றும் கோரக்கூர் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 17ஆம் தேதி வரை  பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் பனிமூட்டம்:

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா, டெல்லியின் ஒரு சில பகுதிகள், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜம்முவின் ஒரு சில பகுதிகளிலும்  அதிக அளவிலான மூடுபனி இருக்கும் நிலை நீடிக்கும் என்றும் எச்சரித்து உள்ளது.

இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.2,000 அளிக்கும் அரசின் வாக்குறுதி – வெளியான அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை  கருத்தில் கொண்டு லக்னோ  மீரட் மற்றும் கோரக்கூர் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கு ஜனவரி 17ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாகவும்,  லக்னோவில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு காலை 10 மணி முதல் 3 மணி வரை மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடுமுறை தினங்களில் முன்னதாகவே  நடத்த திட்டமிடப்பட்டிருந்த செய்முறை மற்றும் மாதிரி  தேர்வுகளை காலை 10 மணி முதல் 2 மணி வரை நடத்திக் கொள்ள அனுமதி அனுப்பப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!