இந்தியாவில் மீண்டும் களமிறங்கும் TikTok செயலி – அதுவும் இந்த பெயரிலா? பயனர்கள் ஆர்வம்!
இந்தியாவில் TickTack எனும் புதிய பெயரில் மீண்டும் TikTok செயலி அறிமுகமாகவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் TikTok பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
டிக்டாக் செயலி:
இந்தியாவில் டிக்டாக் செயலி கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த செயலியில் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக கூறி பலர் இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரும் டிக்டாக் செயலியை அதிகம் பயன்படுத்தினர். தங்களின் நடிப்பு திறமைகளை வெளிப்படுத்த டிக்டாக் சிறந்த மேடையாக திகழ்ந்தது. மேலும் இதன் மூலம் சிலருக்கு பட வாய்ப்புகளும் குவிந்தது.
தமிழகத்தில் ஜூலை 25 வரை மழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!
இந்த நிலையில் கொரோனா தொற்று மற்றும் இந்திய – சீனா எல்லை விவகாரத்தில் இந்தியா 59 சீன செயலிகளை தடை செய்தது. அதில் டிக்டாக் செயலியும் ஒன்று. அதன் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்ட சிங்காரி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த செயலியில் வீடியோவை பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் செய்வது மட்டுமின்றி, நண்பர்களுடன் மெசேஜ் அனுப்பும் வசதியும் இடம் பெற்றது. இந்தியாவை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவும் TikTok செயலியை தடை செய்தது.
TN Job “FB Group” Join Now
TikTok செயலி மீதான தடை இந்திய பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீண்ட கால இடைவெளிக்கு பின்பு மீண்டும் டிக்டாக் அறிமுகமாகவுள்ளது. டிக்டாக் செயலி “TickTack” எனும் புதிய பேரில் அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி TikTok பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.