திருப்பதி தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – பிப்ரவரி மாத டிக்கெட்! நாளை வெளியீடு!
கொரோனா பரவல் காரணமாக அனைத்து கோவில்களிலும் கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை நாளை வெளியிட உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில்
கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக அனைத்து வழிபாட்டு தலங்களை திறப்பதற்கும், திருவிழாக்களை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளதால் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல சில கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
சென்னை: நகை வாங்க இதுதான் சரியான நேரம் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
மேலும் 48 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொண்டு பரிசோதனையின் முடிவில் கொரோனா நெகட்டிவ் என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். அத்துடன் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்தும் விதமாக குறைவான அளவில் தரிசன டிக்கெட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் மற்றும் இலவச தரிசன டிக்கெட்டுகள் நாள் ஒன்றுக்கு 10000 தரிசன டிக்கெட்டுகள் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிட உள்ளதாக தேவஸ்தானம் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது
EPFO ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு – முக்கிய சுற்றறிக்கை வெளியீடு! தவறாமல் படிங்க!
இந்த அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் பிப்ரவரி மாதம் தரிசன செய்ய ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை நாளை காலை 9 மணிக்கு இணையதளத்தில் வெளியிட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசன டிக்கெட்டுகளை நாளை மறுநாள் ஜனவரி 29ம் தேதி காலை 9 மணிக்கு வெளியிட உள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தின் மூலமாக தங்களின் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.