சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு – இன்று முதல் டிக்கெட் முன்பதிவு!

0
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு - இன்று முதல் டிக்கெட் முன்பதிவு!
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு - இன்று முதல் டிக்கெட் முன்பதிவு!
சபரிமலை ஐயப்ப பக்தர்களின் கவனத்திற்கு – இன்று முதல் டிக்கெட் முன்பதிவு!

இந்தியாவில் கொரோனாவின் 3ம் அலையின் தாக்கத்தை கட்டுப்படுத்த மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்க உள்ளதால் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளை வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில்

இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில் இதனை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இங்குள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள்.

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த பல்வேறு விதிமுறைகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதனால் தற்போது பக்தர்களின் வருகை குறைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதையடுத்து மாசி மாத பூஜைகள் நடத்துவதற்காக வருகிற 12ம் தேதி அன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலை 5 மணி அளவில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி அவர்கள் நடையை திறந்து வைப்பர். இதனை தொடர்ந்து தீபம் ஏற்றி வைப்பர். மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. அன்று இரவு 8 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.

TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 200 காலிப்பணியிடங்கள்

இதையடுத்து மீண்டும் 13 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். மேலும் அன்று தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறும். தற்போது இந்த பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொள்ள சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் கூறியதாவது, நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு இன்றுடன் தொடங்குகிறது. மேலும் வருகை தரும் பக்தர்கள் கொரோனாவின் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொண்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை முடிவில் ‘நெகட்டிவ்’ என்ற சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!