தமிழக திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் உயர்வு – உரிமையாளர் சங்கம் கோரிக்கை! முதல்வருக்கு கடிதம்!
தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் தியேட்டர்கள் திறக்கப்படாததால் சினிமா துறையினரும், தியேட்டர் உரிமையாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்கம் அரசுக்கு முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளது.
சினிமா டிக்கெட் விலை:
இந்தியா முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக அனைத்து துறைகளும் கடும் சரிவை சந்தித்தது. அதில் சினிமா துறையும் ஒன்று. ஊரடங்கால் தியேட்டர்கள் திறக்க தடை விதிக்கப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் திரையரங்குகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டால் தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால் திரையரங்களை திறக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.
Follow our Instagram for more Latest Updates
இதனால் திரையரங்க உரிமையாளர்கள் வருமானம் இன்றி மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது பெரும்பாலான படங்கள் திரையரங்குகளில் வெளியாகாமல் OTT தளங்களில் வெளியாகிறது. இதுவும் திரையரங்க உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ. 190 வசூலிக்கப்படுகிறது. மேலும் தனி திரையரங்குகளில் 120 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த 2 திரையரங்குகளிலும் மின்சார கட்டணம், ஊதியம் போன்ற அனைத்து செலவினங்களும் ஒரே அளவில் தான் உள்ளது. அதனால் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளை போல தனி திரையரங்குகளிலும் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக திரையரங்கு உரிமையாளர் சங்கம் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.