ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – இனி டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி!
ரயில் நிலையங்களில், டிக்கெட் எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதை தவிர்க்க தெற்கு ரயில்வே தானியங்கி டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரத்தை டிக்கெட் கவுன்டர்கள் அருகில் வைத்துள்ளது. மேலும் பயணிகளின் கூடுதல் வசதிக்காக தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் ‘க்யூ ஆர்’ கோடு (QR CODE) மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையையும் தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது
தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு:
கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வசதிக்காக, சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. பயணியர் ரயில்கள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள், நாடு முழுதும் இயக்கப்படவில்லை, இதனால் சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். தற்போது நோய் தாக்கம் குறைந்து உள்ளதால் அமலில் இருந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் திரும்ப பெறப்பட்டு உள்ளன.
தந்தி தொலைக்காட்சியில் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தற்போது கோடை விடுமுறை தொடங்கிவிட்டதால், ரயிலில் பயணம் செய்யும் பொதுமக்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. பல இடங்களில் டிக்கெட் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. முன்னதாக ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் நீண்ட நேரம் கவுண்டர்களில் நிற்பதற்கு பதிலாக, தானியங்கி இயந்திரம் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தற்போது பயன்பாட்டில் உள்ளது. இதுவரை தெற்கு ரயில்வே சார்பில் ரயில் நிலையங்களில் 99 தானியங்கி இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டிலிருந்தே தங்களுக்குத் தேவையான பொருட்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக பணம் செலுத்தி வாங்கிக் கொள்ள முடிகிறது. இதன் அடிப்படையில் ரயில் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, இந்த தானியங்கி இயந்திரங்களில் ‘க்யூ ஆர்’ கோடு மூலமாக பணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையை தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இதனை பயன்படுத்தி பயணிகள் எளிதாக தாங்களே பயணச்சீட்டை எடுத்துக்கொள்ளலாம்.அந்த வகையில் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் டிக்கெட் பெறுதல், சீசன் டிக்கெட்டுகளை புதுப்பித்தல் மற்றும் ஸ்மார்ட் கார்டுகளை ரீசார்ஜ் செய்தல் உள்ளிட்ட சேவைகளை ‘க்யூ ஆர்’ கோடு (QR CODE) மூலம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளது. இந்த முறை மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.