திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்வோருக்கு ஷாக் அறிவிப்பு – டிக்கெட் விநியோகம் நிறுத்தம்!
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
திருப்பதி:
திருப்பதியில் கொரோனா அச்சம் காரணமாக பக்தர்கள் கூட்டத்தை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாதம் தோறும் திருப்பதியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.300 டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி டிக்கெட் விநியோகம் தொடங்கப்படுகிறது. கொரோனா தாக்கத்தால் ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். தற்போது அரசின் முயற்சிகளிலும், மக்களின் போதிய ஒத்துழைப்பாலும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் 11 நாட்கள் அரசு பொது விடுமுறை – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
இதனையடுத்து அனைத்து தரிசனத்திற்கும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நேரத்தில் பூஜைகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்பட்டது. மேலும் இலவச தரிசன டிக்கெட்டுகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் இலவச தரிசன டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் இலவச தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நாளை (ஏப்12) வரையும் மட்டுமே இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 12-ந்தேதி மதியத்திற்கு பிறகு இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும். 12-ந்தேதி தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 13-ந்தேதி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். எனவே, பக்தர்கள் இதை கருத்தில் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.