ஆதார் அட்டை மூலம் ரூ. 4 லட்சம் வரையில் கடன் உதவி? மத்திய அரசு விளக்கம்!

0
ஆதார் அட்டை மூலம் ரூ. 4 லட்சம் வரையில் கடன் உதவி? மத்திய அரசு விளக்கம்!
ஆதார் அட்டை மூலம் ரூ. 4 லட்சம் வரையில் கடன் உதவி? மத்திய அரசு விளக்கம்!
ஆதார் அட்டை மூலம் ரூ. 4 லட்சம் வரையில் கடன் உதவி? மத்திய அரசு விளக்கம்!

இந்தியாவில் ஆதார் அட்டை மூலம் மத்திய அரசிடம் இருந்து கடன் தொகை வழங்கப்படுவதாக தகவல்கள் இணையத்தில் பகிர்ந்து வரப்படுகிறது. மேலும் இது குறித்து மத்திய அரசு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஆதார் அட்டை:

இந்தியாவில் ஆதார் அட்டை ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகளின் அனைத்து தேவைகளுக்கும் ஆதார் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இத்தகைய ஆதார் அட்டைகளை பயன்படுத்தி பல மோசடிகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஆதாருடன் மொபைல் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. மேலும் அவ்வாறு இணைக்காவிட்டால் மக்களுக்கு எந்த ஒரு சலுகைகளையும் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஆதார் அட்டை மூலம் நடைபெறும் மோசடிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ஆதார் அட்டை மூலம் மத்திய அரசிடம் இருந்து கடன் தொகை வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, அனைத்து ஆதார் அட்டைதாரர்களுக்கும் மத்திய அரசு ரூ.4.78 லட்சம் கடன் கொடுப்பதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொழில்துறை நிபுணர்களுக்கு பேராசிரியர் பணி – யுஜிசி முக்கிய முடிவு!

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று PIB விளக்கம் அளித்துள்ளது. மேலும் இந்த செய்தியை மக்கள் யாருக்கும் பகிர கூடாது என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் மூலம் மோசடிகள் நடைபெறுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் இத்தகைய மோசடிகளில் இருந்து கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான சந்தேகத்திற்கு இடமான மெசேஜ் வரும் போது மக்கள் https://factcheck.pib.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் அல்லது  +918799711259 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் அளிக்கலாம் அல்லது [email protected]  என்ற இமெயில் முகவரிக்கு உங்கள் சந்தேகங்களை தெரிவிக்கலாம் என  PIB  தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!