மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் கொட்டப்போகும் பண மழை!
மத்திய அரசின் ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அரசு உயர்த்தி உள்ளது. இதுமட்டுமல்லாமல் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் சேர்த்து ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஜாக்பாட் அறிவிப்பு:
கடந்த மாதம், மத்திய அமைச்சரவை 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை (DA) 3% ஆக உயர்த்தி அறிவித்தது. இதன் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மொத்த DA தொகை 34% ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே ஊழியர்களுக்கு ரயில்வே வாரியம் 14% அகவிலைப்படியை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள். இதையடுத்து ஊழியர்களுக்கு 10 மாத நிலுவைத் தொகை வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ரயில்வே ஊழியர்களுக்கு 10 மாதங்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்கப்படுவதன் மூலம் மிகப்பெரிய தொகை மொத்தமாக வரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அகவிலைப்படி 2 பிரிவுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 6வது சம்பள கமிஷன் கீழ் ஊதியம் பெறும் ரயில்வே ஊழியர்களுக்கு 2021 ஜூலை முதல் 7% அகவிலைப்படி உயர்வு, பின்னர் 2022 ஜனவரி முதல் 7% அகவிலைப்படி உயர்வு என மொத்தம் 14% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு 189 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்த ஊழியர்களுக்கு ஜூலை 1, 2021 முதல் DA தொகை 196 சதவீத அடிப்படையில் மட்டும் அதிகரிக்கப்படும். அதேபோல், 2022 ஜனவரி 1 முதல் 7 சதவீத அதிகரிப்புடன் ஊழியர்களுக்கு மொத்த DA, 203 சதவீதமாக உயரும். இந்த இரண்டு அகவிலைப்படி உயர்வுகளையும் இணைத்து, ஊழியர்களுக்கு மே மாத சம்பளத்துடன் 10 மாத நிலுவைத் தொகையும் வழங்கப்படும். இதனால் ரயில்வே ஊழியர்களுக்கு ஒரே மாதத்தில் மூன்று ஜாக்பாட் கிடைக்க உள்ளன.