தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி – இன்று அறிவிப்பு?
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் இன்று (ஆகஸ்ட் 7) வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
நிதியுதவி திட்டம்
கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு வெற்றி பெறுவதற்கு முன்னதாக, தேர்தலின் போது மக்களுக்கு நிறைவேற்றப்படுவதாக கூறி சில வாக்குறுதிகளை கொடுத்தது. அதில் கொரோனா நிவாரண நிதி, பெண்களுக்கு அரசுப் பேருந்துகளில் இலவச கட்டணம், பால் விலை குறைப்பு உள்ளிட்ட சில முக்கிய அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என்ற அறிவிப்புகளை செயல்படுத்துவதில் மட்டும் கால தாமதம் ஆனது.
சனிக்கிழமைகளில் மதுபான கடைகள் திறக்க அனுமதி – கேரள அரசு!
அதாவது கொரோனா 2 ஆம் அலை பரவல் தமிழகத்தில் சற்று அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்தி வந்ததால், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசு தாமதம் காட்டி வந்தது. இதனிடையே இவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதில் பலருக்கும் குழப்பங்கள் எழுந்து வந்தது. மேலும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என அவ்வப்போது தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
TN Job “FB Group” Join Now
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ரூ.1000 நிதியுதவி வழங்குவது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இன்று (ஆகஸ்ட் 7) வெளியாக இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. அதாவது இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும், திட்டம் அமல்படுத்தப்படும் தேதிகள் குறித்த அறிவிப்புகள் இன்று (ஆகஸ்ட் 7) வெளியிடப்பட இருப்பதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கிறது.