இலவச ரேஷன் தேவையில்லையெனில்…கவுரவ குடும்ப அட்டை – புதுச்சேரி அரசின் அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்கள் இலவச ரேஷன் பொருட்களை பெறாததால், முறைகேடுகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதனை தடுக்கும் பொருட்டு, புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கவுரவ குடும்ப அட்டை
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை பொறுத்தவரை ரேஷன் கார்டுகள் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரு வகையில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், சிவப்பு ரேஷன் அட்டை ஏழை எளிய மக்களுக்கும், மஞ்சள் வண்ண ரேஷன் அட்டை அரசு ஊழியர்கள் மற்றும் வசதி படைத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், இதில் சிவப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச ரேஷன் பொருட்களை பெறுவதில்லை
தமிழகத்தில் வெளி மாநிலத்தவர்கள் நலனிற்காக உதவி அலைபேசி எண் – காவல்துறை வெளியீடு!
இதனால் இவர்களுக்கான ரேஷன் பொருட்கள் பிற மாநிலங்களுக்கு கடத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக புகார் எழுந்துள்ளது. அதனால் இந்த மோசடிகள் நடைபெறுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முன்னதாக இலவச அரிசி பெறாதவர்களின் சிவப்பு குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்த நிலையில், சிவப்பு அட்டை பெறாத வசதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு கௌரவ குடும்ப அட்டை வழங்கப்படும் என புதுச்சேரி அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து இவர்கள் தங்களின் ரேஷன் அட்டைகளை குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகத்தில் சமர்ப்பித்து, கவுரவ குடும்ப அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுரவ குடும்ப அட்டை பெறும் நபர்கள் சிறப்பு பிரஜைகளாக கருதி, அரசின் இலவசங்கள் ஏதும் அளிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.