தமிழகத்தில் மாதம் ரூ.58,100/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க நாளை (செப்.30) கடைசி நாள்!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்கான மொத்தம் 11 காலியிடங்கள் இருப்பதாக வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள சமையலர் மற்றும் சலவையாளர் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து வெளியான அறிவிப்பில் சமையலர் – 5 பணியிடங்கள், சலவையாளர் – 6 பணியிடங்கள் என மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- இந்த பணியிடங்களில் விண்ணப்பிக்க தகுதியாக தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்திருந்தால் போதும். மேலும் மருத்துவக் கல்லூரியில் வெளியான பணியிடங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 எனவும் அதிகபட்ச வயது 32 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும் வயது வரம்பில் உள்ள தளர்வுகள் குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும். மருத்துவ கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.18,536/- மாத ஊதியத்தில் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
விண்ணப்பிக்கும் முறை:
தூத்துக்குடி மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனுப்ப 30.09.2022 கடைசி நாள் ஆகும். அதற்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Download Notification
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்