மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
அய்யா வைகுண்டர் அவதார தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். மேலும் இதற்கான மாற்று வேலை நாளையும் அவர் அறிவித்துள்ளார்.
பொது விடுமுறை:
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பண்டிகைகளை பொறுத்து உள்ளூர் விடுமுறை, பொது விடுமுறைகள் விடப்படுவது வழக்கம். முன்னர் ஜனவரி 24ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை மறுநாள் (மார்ச் 4) அய்யா வைகுண்டர் அவதார தினம் கொண்டாடப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
இதனை முன்னிட்டு மார்ச் 4ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதிற்கும் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்படுகிறது. மேலும் அன்றைய தின விடுமுறை அரசு தேர்வுகள் சம்மந்தப்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அது தொடர்புடைய பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி செலாவணி முறிவுச் சட்டத்தின் படி, இது பொது விடுமுறை நாள் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2098 காலிப்பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவுகள் ஒத்திவைப்பு
அன்றைய தினம் சார்நிலை மற்றும் மாவட்ட கருவூலங்கள் அனைத்தும் குறைந்த அளவிலான பணியாளர்களை கொண்டு செயல்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் 13ம் தேதி மாற்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்