2021 நீட் தேர்வுகள் வழக்கமான முறையில் நடத்தப்படும் – மத்திய அரசு திட்டவட்டம்!!
மத்திய அரசு 2021ம் ஆண்டுக்கான மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நீட் தேர்வு வழக்கமான முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
நீட் தேர்வு:
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நீட் தேர்வின் மதிப்பெண்கள் மூலம் மட்டுமே நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் பொறியியல் நுழைவு தேர்வான ஜே.இ.இ நுழைவு தேர்வை நடப்பு ஆண்டில் இருந்து 4 முறை நடத்த ஐ.ஐ.டி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதே போல் நீட் தேர்வுகளையும் கூடுதல் முறைகளில் நடத்த வேண்டும் என்றும், ஆன்லைன் வாயிலாக தேர்வை நடத்த வேண்டும் என்றும் பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுகின்றனர்.
ஓட்டுச்சாவடிகளில் பணிபுரிய உள்ள ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நிபந்தனை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
உயர்கல்வித்துறை பதில்:
மாணவர்களின் இந்த கோரிக்கைக்கு மத்திய உயர்கல்வித்துறை செயலர் அமித் கரே அவர்கள், நீட் தேர்வை ஒரு ஆண்டில் கூடுதல் முறைகள் நடத்த வேண்டும் என்று தான் மத்திய அரசும் விரும்புகிறது. தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்கள் கூடுதல் வாய்ப்பின் மூலம் அதிக மதிப்பெண்கள் எடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் ஆன்லைன் தேர்வுகளில் மட்டுமே இது சாத்தியமாகும்.
நேரடி தேர்வு நடைமுறையில் ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் தேர்வு நடத்துவதில் பல சிக்கல்கள் உள்ளது. மேலும், குறுகிய காலத்தில் மாற்றங்கள் குறித்து அறிவிப்பு செய்தால் மாணவர்கள் தேர்வில் பாதிக்கப்படக் கூடும். எனவே, 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வழக்கமான நேரடி முறையில் மட்டுமே நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்