தமிழகத்தில் ஜூலை 11ம் தேதியன்று பள்ளி, கல்லூரிகள் & அரசு அலுவலகங்கள் மூடல் – இதற்காக தான்?
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வரும் ஜூலை 11ம் தேதியன்று அனைத்து கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை
திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில் தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற புனிதத்தலங்களில் ஒன்றாகும். இந்த நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு தோறும் கொண்டாடப்படும் ஆனிப் பெருந்திருவிழா ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த திருவிழாவிற்கு தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு நெல்லையப்பர் கோவிலின் ஆனிப் பெருந்திருவிழா சமீபத்தில் கொடியேற்றத்துடன் துவங்கி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது. அந்த வகையில் புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலின் தேரோட்ட நிகழ்வை கருத்தில் கொண்டு வரும் ஜூலை 11ம் தேதியன்று அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ள அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, ‘தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வரும் ஜூலை 11ம் தேதியன்று நடைபெற இருக்கிறது.
இந்த நிகழ்வை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் ஏதேனும் அரசு பொதுத்தேர்வுகள் இருந்தால் அம்மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் வழக்கம் போல செயல்படும். இதற்கிடையில் இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வரும் ஜூலை 23ம் தேதியன்று பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் வேலை நாளாக செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்