சென்னை: நகை வாங்க சரியான நாள் இது தான் – தங்க விலை அதிரடி சரிவு!
தமிழகத்தில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது. அதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இன்றைய தங்கத்தின் நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
தங்கம் விலை
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு தங்களின் பணத்தை பாதுகாப்பான முறையில் சேமிக்க மக்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகின்றனர். அத்துடன் வெளிநாட்டவர்களும் தங்கத்தின் மீது அதிக முதலீடு செய்கின்றனர். அதனால் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதனால் சாமானிய மக்கள் தங்கத்தை எப்போது வாங்குவது உகந்ததாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்த நிலையில் இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது.
அதாவது நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரித்து சவரன் ரூ.38,000க்கும் ஒரு கிராம் ரூ.14 உயர்ந்து ரூ.4,750க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதன்படி நேற்று தங்கத்தின் விலை 38 ஆயிரத்தை தொட்டநிலையில் இன்று அதிரடி சரிவை கண்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 என குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது.
PM கிசான் திட்டத்தின் 12 வது தவணை விரைவில் வெளியீடு – பட்டியலை சரிபார்க்கும் முறை!
இதே போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.55 குறைந்து ரூ.4,695க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகைப்பிரியர்கள் இன்றே தங்கத்தை வாங்கி சேமித்து வைத்துக் கொள்ளலாம். இதையடுத்து சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.58-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.58,000க்கு விற்பனையாகிறது. இதனை தொடர்ந்து தங்கத்தின் விலை வரும் காலங்களில் பணவீக்கம், கொரோனா பரவல் உள்ளிட்டவற்றின் காரணமாக மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்