மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை கிடைப்பதில் சிக்கல்? காரணம் இதுதான்!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை கிடைப்பதில் சிக்கல்? காரணம் இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை கிடைப்பதில் சிக்கல்? காரணம் இதுதான்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA நிலுவைத் தொகை கிடைப்பதில் சிக்கல்? காரணம் இதுதான்!

கடந்த ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள DA நிலுவைத் தொகை தற்போது வழங்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

DA நிலுவைத்தொகை

சமீபத்தில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. பொதுவாக அரசு ஊழியர்களுக்கு டிஏ மற்றும் டிஆர் தொகை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தப்படுகிறது. இதற்கிடையில் வரும் ஜூலை 2022 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு இருக்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராஜ்யசபாவில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டிஏ மற்றும் டிஆரை நிறுத்தி வைத்ததால் அரசுக்கு ரூ. 34,402 கோடி சேமிப்பு கிடைத்தது.

TN Job “FB  Group” Join Now

ஆனால் ஜூலை 2021ல் DA முடக்கம் நீக்கப்பட்டது. மேலும் டிஏ மற்றும் டிஆர் கொடுப்பனவுகள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். சமீபத்தில், ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறைக்கான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தலைமையில் நடைபெற்ற 32வது கூட்டத்தில், செலவினத் துறையின் (DoE) பிரதிநிதி, டிஏக்கள் மற்றும் டிஆர்களின் அளவைக் குறிப்பிட்டார். இது குறித்த ஒரு ஊடக அறிக்கை, நிலுவையில் உள்ள DA தொகையை மீட்டெடுக்க முடியாது என்று தகவல் அளித்திருந்தது. கடந்த மாதம், 7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படியை 3 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? கொரோனா எதிரொலி! ஏப்ரல் 27 பிரதமர் ஆலோசனை!

இந்த நடவடிக்கையால் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் அடைகின்றனர். மேலும், ஜூலை 2021ம் ஆண்டு DA முடக்கம் நீக்கப்பட்டதிலிருந்து, DA மற்றும் DR இதுவரை மூன்று உயர்வைக் கண்டுள்ளது. கிட்டத்தட்ட இந்த கொடுப்பனவுகள் இருமடங்காக அதிகரித்துள்ளது. இப்படி இருக்க, கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் வழங்கப்பட்ட அகவிலைப்படி நிவாரணத்தை (DR) வெளியிடுவதற்கான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததாக சமீபத்திய தகவல்கள் கூறுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!